சிம்பு மற்றும் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக இணையும் படம் “மாநாடு” . பல சர்ச்சைகள் மற்றும் தாமதங்களுக்கு பிறகு மாநாடு படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நடிகர் சிம்பு பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார்.அதில் “நடிகர் சிம்புவை எனக்கு பல வருடமாக தெரியும். எனது முதல் படமான சென்னை-28ல் சரோஜா பாடலை க்ளைமேக்ஸுக்கு முன் வைக்க சொல்லி அறிவுரை வழங்கினார்.
அதுமட்டுமின்றி மதுரை ஏரியாவை விற்க சிம்பு தான் எனக்கு உதவி செய்தார். அவருடன் பணிபுரிய வேண்டும் என்பது நீண்டநாள் கனவு.
அது இப்போது தான் நிறைவேறியுள்ளது. சிம்பு ஞாயிறு கிழமைகளில் படப்பிடிப்புக்கு வரமாட்டார் என சொல்லப்படுகிறது. ஆனால் நான் அவரை வைத்து ஞாயிற்றுக்கிழமை மாலை6 மணி முதல் அடுத்த நாள் காலை6 மணி வரை படப்பிடிப்பை நடத்தினேன். சிம்புவை பற்றி மற்றவர்கள் கூறும் பொய்யான குறைகளை கேட்கும்போது ஆச்சர்யமாக உள்ளது” என கூறியுள்ளார்.