காவல்துறையை பெருமைப்படுத்தி பல படங்களிள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன. அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இயக்குனர் ஹரி இயக்கிய சாமி – 1&2 மற்றும் சிங்கம் – 1&2&3 படங்கள் தான்.

இந்த நிலையில் காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்கள் இயக்கியதற்கு வெட்கப்படுகிறேன் என இயக்குநர் ஹரி அவதெரிவித்துள்ளார். இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சாத்தான்குளம் விவகாரம் குறித்து ஏற்கனவே பல கோலிவுட் பிரபலங்கள் தங்களது ஆதரவு மற்றும் கருத்து கூறிய நிலையில் தற்போது ல் இயக்குனர் ஹரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிட கூடாது. அதற்கு ஒரே வழி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்”என இயக்குனர் ஹரி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.