வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் வின்னர் (கைப்புள்ள), கிரி (பேக்கரி ஓனர் வீரபாகு), தலைநகரம் (நாய் சேகர்) ஆகிய திரைப்படங்கள் மைல்கல்லாக அமைந்தன. இயக்குனர் சுந்தர் சி க்கு முக்கியமான பங்கு உண்டு. இவர்கள் இருவரின் காம்போ எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும். இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த நகரம் திரைப்படத்தின் காமெடி ட்ராக் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் சுந்தர்.சி மற்றும் வடிவேலு காம்போ மீண்டும் இணைய உள்ளது. தலைநகரம் படத்தின் மூன்றாம் பாகம் “தலைநகரம் 2” பெயரில் உருவாகவுள்ளது. இருவரும் மீண்டும் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி மற்றும் 6 மெழுகுவர்த்திகள் போன்ற படங்களை இயக்கிய வி.இசட். துரை இயக்கவுள்ளார்.