V4UMEDIA
HomeNewsKollywoodவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா !

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா !

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் கணவன் மனைவி போலவே வெளிநாடுகள் உட்பட பல இடங்களுக்கு ஷூட்டிங் இல்லாத ஓய்வு நேரத்தில் ஒன்றாக சென்று வருகிறார்கள். விரைவில் இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.



இந்நிலையில் கடந்த சில தினங்களாக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வதந்திகள் பரவியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் சேர்ந்து குழந்தை போல் கியூட்டான ரியாக்ஷன் கொடுத்துள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் “நாங்கள் உயிருடன், ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம். நீங்கள் கேலி செய்யும் கற்பனையையும் உங்கள் தேவையில்லாத வதந்திகளையும் பார்க்க காண கடவுள் எங்களுக்கு போதுமான பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளார்” என கூறியுள்ளார்.

…. And that’s how we see the news about us , the dear corona & ur wonderful designs with dead images of us 😅😅 !!

Hi 👋 we are alive , healthy and happy😇

God has given us enough strength & happiness to see the imagination of all you jokers and your silly jokes 😇🧚‍♂️🧚‍♂️🥳🥳 pic.twitter.com/1J9cdmVXv6— Vignesh Shivan (@VigneshShivN) June 21, 2020

Most Popular

Recent Comments