வருடாவருடம் தளபதி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி மகிழ்வார்கள். தமிழகம், கேரளா, ஆந்திரா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஜூன் 2வ் நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் என பல உதவிகள் செய்வார்கள். தமிழகம் மற்றும் கேரளாவில் அவரது படங்களை ரீ-ரிலீஸ் செய்வார்கள்.
ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என்று அன்பு கட்டளை போட்டுள்ளார் தளபதி விஜய். தனது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள், செய்தித்தாள் வாழ்த்துகள் ஆகியவற்றை அளிப்பதைத் தவிர்த்து வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தனது ரசிகர் மன்ற தலைவர் மூலமாக அனைத்து மன்றங்களும் செய்தி அனுப்ப சொல்லியுள்ளார்.
இந்நிலையில் ஜூன் 22-ம் தேதி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிகில் திரைப்படம் மீண்டும் திரையிடப்பட வுள்ளதாக செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.