டப்பிங் ஆர்டிஸ்டாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக தன் கடின உழைப்பால் உயர்ந்தவர் சியான் விக்ரம். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவிலும் தனது நடிப்பு திறமையால் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சியான் விக்ரமை பிடிக்காதவர்கள் என யாரையும் கூற முடியாது.
விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கிவரும் ‘கோப்ரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சீயான் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
‘ஜிகர்தண்டா’ , ‘பேட்ட’ போன்ற பல ஹிட் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் இப்படத்தை ‘மாஸ்டர்’ மற்றும் ‘கோப்ரா’ பட தயாரிப்பாளர் லலித் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விக்ரமின் 60வது திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பபை ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் என்றும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உலகின் பல நாடுகளில் எடுக்க திட்டமிட்டுள்ளர்கள் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கூறப்படுகிறது