இயக்குனர் ஏ.எல்.விஜய் கீரிடம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தாண்டவம்’, ‘வணமகன்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி 1&2’, ‘லக்ஷ்மி’ போன்ற பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தார்.
இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலா பால் இருவரும் காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரஸ்பர மனதுடன் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் ஐஸ்வர்யா (MBBS) என்ற பெண்ணை கடந்த வருடம் மணம் முடிந்தார் ஏ.எல் விஜய்.’
இந்நிலையில் இயக்குநர் விஜய் – ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்று (மே 30) அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளார்கள்.