அசுரன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் வேள்ராஜுக்கு இந்திய ஒளிப்பதிவாளர் சமூகத்தின் உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
1995-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே இந்திய ஒளிப்பதிவாளர்கள் சமூகம். சுருக்கமாக ISC (The Indian Society of Cinematographers) இது ஒளிப்பதிவாளர்களுக்கான சங்கம் போலச் செயல்படாது. இதன் உறுப்பினராக வேண்டுமென்றால் ஏற்கெனவே இதில் இருக்கும் ஒருவர் அழைப்பு விடுத்தால் மட்டுமே முடியும்.
மேலும் ஒளிப்பதிவு, புகைப்படத்துறையில் சிறந்து விளங்குபவர்களைத் தானாக முன் வந்து அங்கீகரிக்கும் ஒரு சமூகம் இது. திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இச்சமூகம் செயல்படுகிறது. இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் ஒளிப்பதிவாளர்கள், தங்கள் பெயருடன் ISC என்று சேர்த்துக் கொள்ளலாம். இது இந்தியாவில் உயரிய கவுரமாகக் கருதப்படுகிறது.
கே.வி.ஆனந்த், ராஜீவ் மேனன், ரவி.கே.சந்திரன் உள்ளிட்ட ஒளிப்பதிவாளர்கள் இதில் உறுப்பினர்களாகச் செயல்படுகின்றனர். தற்போது இந்த அமைப்பு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அங்கீகரித்துள்ளது. பொல்லாதவன் , ஆடுகளம் , வடசென்னை , அசுரன் ,வைராஜா வை , பவர் பாண்டி, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவுக்காக பல தரப்பிலிருந்து பாராட்டைப் பெற்றவர் வேல் ராஜ் ..