நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜசேகர பாண்டியன் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். முதல்முறையாக ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாக்கியராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
பொன்மகள் வந்தாள் உலகெங்கும் நாளை முதல் (மே 29) OTT யில் அதாவது அமேசான் பிரைம்-ல் ரிலீசாகும். இந்த நிலையில் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தினை சிறப்பு காட்சியாக பார்த்துவிட்டு ஜோதிகாவை மனம்திறந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார் நடிகை ராதிகா. அவர் ‘இணையத்தில் பொன்மகள் வந்தாள் படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்தேன். அருமையான மற்றும் வலுவான கதைக்களம் கொண்ட படமாக அமைந்துள்ளது. சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டள்ள இப்படத்தை தயாரித்து வழங்கியதற்கு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு எனது வாழ்த்துக்கள்’ என ட்வீட் செய்துள்ளார்.