மலையாள சினிமாவின் பிரபல நடிகர் பிருத்விராஜ். தற்போது ‘ஆடுஜீவிதம்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்று மாட்டிக்கொள்ளும் இந்தியர்களின் வாழ்வைப் பற்றி கூறும் கதை தான் இத்திரைப்படத்தின் கதை. இப்படத்துக்காக 58 பேர் கொண்ட குழுவினரோடு ஜோர்டான் நாட்டில் உள்ள ஒரு பாலைவனத்தில் முகாமிட்டு இருந்தனர் படக்குழுவினர். கொரோனா வைரஸ் காரணமாக விமானங்கள் முடக்கப்பட்டதால் படக்குழுவினர் அனைவரும் இந்தியா திரும்ப முடியாமல் தவித்தனர்.
படகுழுவினரை அங்கிருந்து இந்த இக்கட்டான சூழ்நிலையில் மீட்டு வர முடியாது என மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன. அந்நாட்டு அரசிடம் உரிய அனுமதி வாங்கிய படக்குழு படப்பிடிப்பை நடத்தியது.
இந்நிலையில் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பிருத்விராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த குழுவினருடனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் நிலையில் ஜோர்டானில் சிக்கியுள்ள படக்குழுவையும் மீட்க தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 58 பேரும் தனி விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து கொச்சிக்கு மேலும் ஒரு விமானத்தில் நேற்று வந்து இறங்கினர். 60 நாட்களுக்கு மேல் பாலைவனத்தில் இருந்து மீண்டு குடும்பத்தினரிடம் இணைந்து அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.