கொரோனா வைரஸின் தாக்கத்தை தடுக்க இந்தியாவில் 4 வது கட்ட ஊரடங்கு உத்தரவு மே மாதம் 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ்பாபு, விதிகள் தளர்த்தப்பட்டாலும் கூட மக்கள் மாஸ்க் அணிவதை மறக்க கூடாது என தனது சமூக வலைத்தளத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் இப்போது தான் வெளியே செல்ல ஆரம்பித்துள்ளோம். அதனால் ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளார்.We are opening up. Slowly, but surely. In a time like this, masks are mandatory. Make it a point to wear a mask every time you step out, that’s least we can do to protect ourselves and others. pic.twitter.com/2ld3xW9ifM— Mahesh Babu (@urstrulyMahesh) May 22, 2020