சென்னை வண்டலூர் பூங்காவில் ஒரு சிறப்பு திட்டம் சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. அதாவது விலங்கு தத்தெடுப்பு திட்டபடி, விலங்குகளின் உணவு மற்றும் பராமரிப்பு செலவை பொதுமக்கள் யார் வேணாலும் ஏற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் வருமான வரி விலக்கு போன்ற சில சலுகைகள் வழங்கப்படும்.
வண்டலூர் பூங்காவில் மொத்தம் 14 வெள்ளைப்புலிகள் உள்ளன. அதில் ஒன்று தான் அனு என்ற புலி. நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அனு என்ற புலியை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது மே மாதத்தில் இருந்து மேலும் நான்கு மாதங்களுக்கு கூடுதலாக இந்த தத்தெடுப்பை நீட்டித்துள்ளார்.