அருந்ததி, நெஞ்சினிலே, கள்ளழகர், மஜ்னு, ஆத்தாடு, தப்பாங், ஒஸ்தி, ஆகாடு, தேவி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் சோனு சூட். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையிலிருந்து கர்நாடகா செல்ல தனது சொந்த செலவில் பஸ் வசதி செய்து கொடுத்து உதவியுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் மக்களுக்கு பல சினிமா நட்சத்திரங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு மாநில அரசுகளிடமும் முறையான அனுமதி பெற்று தனது சொந்த செலவில் 10 பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளார். சோனு சூட்டின் இந்த மனிதநேயமிக்க செய்யலை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
