கொரோனா வைரஸ் காரணத்தால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், சமூக ஆர்வலர்கள்,சினிமா பிரபலங்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் என தங்களால் முயன்ற நிதியுதவியை அரசாங்கத்துக்கும், ஏழை எளிய மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மரியாதையை செலுத்தி அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் , காய்கறிகள் ஆகியவை வழங்கப்பட்டது .
