V4UMEDIA
HomeNewsBollywoodதிறமையான மனிதரை இழந்து விட்டோம் - இர்பான் கான் மரணம் குறித்து நடிகர் தனுஷ் வருத்தம்...

திறமையான மனிதரை இழந்து விட்டோம் – இர்பான் கான் மரணம் குறித்து நடிகர் தனுஷ் வருத்தம் !

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நல குறைவால் இன்று காலமானார். சில வருடங்களுக்கு முன்பு, இர்பான் கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று கொண்டே சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 28) அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவரை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 29) காலை அவரது உயிர் பிரிந்தது. இர்பான் கான் மறைவுக்கு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இர்பான் கான் மறைவு குறித்து நடிகர் தனுஷ் இரங்கல் செய்தியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “செய்தியைக் கேள்விப்பட்டு மனமுடைந்து போனேன். எவ்வளவு அற்புதமான திறமையுள்ள மனிதரை நாம் இழந்துவிட்டோம். என்றும் அவர் எனக்குச் சொன்ன கனிவான வார்த்தைகளை நினைவில் வைத்திருப்பேன். ஒரு சிறந்த இடம் உள்ளது. அங்கு அவர் இருக்கிறார் என்பது எனக்கு தெரியும். அவரது குடும்பத்துக்கும், நெருக்கமானவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என தனுஷ் தெரிவித்துள்ளார்.

Heartbroken by the news, what a great talent and a wonderful human being we have lost. I will always remember his kind words to me. There is a better place and I know he is there. My deepest condolences to his family and dear ones. May his soul rest in peace— Dhanush (@dhanushkraja) April 29, 2020

Most Popular

Recent Comments