கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 03 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக தளபதி விஜய் ரசிகர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு இரவு பகல் என பாராமல் உழைத்து வருகின்றனர். தளபதி விஜய் நிவாரண நிதியாக முதல்வர், பிரதமர் நிவாரண நிதி மற்றும் கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு என மொத்தம் 1.30 கோடி அளித்துள்ளார். இதுமட்டுமின்றி வறுமையில் வாடும் அவரது ரசிகர்களுக்கு 5000 முதல் 10000 வரை அளித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அமீன், கண்சுலாபீவி என்ற தம்பதிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டு தேனியில் குடியேறி உள்ளனர் . இதற்கிடையில் கொரோனா ஊரடங்கால் அமீன் வேலை செல்ல முடியாமல் தன் 5 மாத கர்ப்பிணி மனைவியின் மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் திண்டாடியுள்ளார். இந்த தகவலை தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள், தளபதி விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது ஆலோசனைப்படி ரூ 5,000 பணத்தை கொடுத்து உதவி செய்துள்ளனர்.
கொடுத்தவர் கிருஸ்துவர்…..
(எங்கள் தளபதி ஜோசப் விஜய்)
தகவலை கொண்டுசேர்த்தவர் இந்து…
(மாநில பொருப்பாளர் புஸ்ஸீ ஆனந்த்
LEFT பாண்டி )
கேட்டவர் இஸ்லாமியர்….
(பயணாளி அமிர்)
போங்காடா நீங்களும் உங்க? pic.twitter.com/XbMP5QZl3t— LEFT PANDI (@leftpandi) April 28, 2020