சென்னை 28 படக்குழு 13 வது ஆண்டை கொண்டாடுகிறது !
சென்னை 600028 வெளியாகி 13 ஆண்டுகளை கடந்துள்ளது .கோலிவுட்டின் மிக முக்கிய படங்களில் இந்த சென்னை 28 படமும் ஒன்று. வெங்கட் பிரபு இந்த ‘சென்னை 600028’ படம் மூலம்தான் தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக அறிமுகமானார் .
இந்த ‘சென்னை 600028’ படம் தமிழகத்தில் பலத்த வரவேற்பை பெற்றது. தெருவுக்குள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் இளைஞர்களின் காதலை, கலாய்ப்புகளை, நட்பை அனைவரும் ரசிக்கும்விதமாக திரையில் கொண்டு வந்திருந்த வெங்கட் பிரபுவை தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலுமுள்ள தெரு கிரிக்கெட் சங்கங்கள் நன்றியோடு நினைத்துப் பார்த்திருக்கும். நம்ம கட்டிங் கண்ணையா பாணியில் சொல்வதானால் ‘மேல இருக்கிற மஞ்சள் தோல் பிய்ந்து போன டென்னிஸ் பந்து, உடைந்த பெஞ்சிலிருந்து வந்த பேட், 20 ரூபாய் பெட் மேட்ச்சுக்கு 5 ரூபாய் குறையிறப்ப, அந்த 5 ரூபாய் கொடுத்தவனை ஓபனிங் இறங்க வச்சது, 10 ரன்னுக்கு ஒரு முறை 2 ரன் எக்ஸ்ட்ரா ஸ்கோர் ஏத்துறது, கவுண்டி கிளப் ல ஆடுற மாதிரி தன் டீம்முக்கு மேட்ச் இல்லாதப்ப அடுத்த டீம்முக்கு ஆடிக் கொடுப்பது, ஒத்தையா நின்ன அசோக மரத்தை ஸ்டம்பா வச்சு அதுக்கு பின்ன மட்டும் அடிக்கும் Back-Run கிரிக்கெட் ம்ம்ம் இப்படி அனேக சிறு வயது கிரிக்கெட் சம்பந்தப் பட்ட நினனவுகள் அத்தனையையும் ஒரு ஷாட்ல கிளறிவிடுற படம் தான் “சென்னை – 600028”.
ஆம்.. நான்கு இளைஞர்களை வைத்து படம் எடுத்தாலே நாலு பேருக்கும் சேர்த்து ஆறு லவ் ட்ராக், வேலை இல்லாமல் வெட்டியாய்த் திரிதல், பெற்றோரை திட்டுவது, பெற்றோர்கள் இவர்களைத் திட்டுவது, ட்ரிபிள் மீனிங் காமெடி என ஒரு வட்டத்துக்குள்ளே சுற்றாமல் வித்தியாசமான திரைக்கதை அமைத்து சுவாரசியமான படமாக எடுத்திருக்கும் வெங்கட் பிரபு முன்னரே சொன்னது போல் ‘சென்னை 600028’ படம் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் மத்தியிலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கதைக்காக ரூம் போட்டு யோசித்து கொண்டிருந்த பல இயக்குநர்கள், ஜாலியாக இவர் எடுத்த படத்தைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். இதையெல்லாம் கதையாக்க முடியுமா? இந்த பட்ஜெட்டில் அனைவரும் ரசிக்கும் படியான படத்தை இயக்க முடியுமா? என யோசிக்கத் தொடங்கினர். ஆனால், ஒரு சாரரோ படத்தின் உருவாக்கம் பாராட்டும்படியாக இல்லை. இது செல்போன் கேமராவில் எடுக்கப்பட்ட படம் என கிண்டல் அடிக்கவும் செய்தனர்.
. படத்தில் பெரும்பாலன நடிகர்கள் நடிகைகள் , புதுமுகங்கள் அல்லது அதிகம் அறியப்படாதவர்கள். அவர்களை வைத்துக் கொண்டு தைரியமாக இப்படத்தை தயாரித்த சரண் குழுவினரைப் பாராட்டலாம். பகவதி' படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்த ஜெய்,
ஜி’ படத்தில் அஜித்துக்கு நண்பனாக நடித்த நிதின் சத்யா, ’12-பி’ படத்தில் ஒரு சீனுக்கு மட்டும் தலையைக் காட்டிய சிவா, உனக்கும் எனக்கும்' படத்தில் நடித்த அரவிந்த் ஆகாஷ், நடன இயக்குநர் அஜய்ராஜ் எனப் பலருக்கும்
சென்னை 600028′ புது முகவரி தந்தது. அறிமுக நடிகர்களான விஜய் வசந்த், விஜயலக்ஷ்மி ஆகியோருக்கும் இந்தப் படம் நல்ல ஆரம்பம். சிவா, ஜெய், விஜய் வசந்த், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, இனிகோ பிரபாகரன், பிரேம்ஜி ஆகியோர் தனித்தனியாக ஹீரோவாகவும், புரொடியூசர்களாகவும் உயர்ந்து விட்டார்கள்.
படத்தின் பாடல்களை யுவன் ஷங்கர் ராஜா தூக்கி நிறுத்தி இருந்தார், பின்னணி இசை பிரேம்ஜி அமரன் என்று சொன்னதை இப்பவும் நம்ப முடியலை. டைட்டில் கார்டு உள்ளே வா' முதல்
எண்டு கார்டு `ஜல்சா ரீமேக்’ வரை படத்தில் மொத்தம் 9 பாடல்கள். எஸ்.பி.பி, யோகி பி, கருணாஸ், விஜய் ஏசுதாஸ் எனக் கிட்டதட்ட 19 பாடகர்களின் குரல்கள் அவற்றில் பிண்ணிப் பிணைந்திருக்கின்றன. பாடல்கள் ரிலீஸான முதல் நாளே 25,000 சிடிக்கள் விற்றுத் தீர்ந்துச்சாம்
படத்தில் வரும் வசனங்களும் மிகவும் யதார்த்தமாய் கோலிவுட்டுக்கே ரொம்பவே புதுசா இருந்தது . இதில்தான், என்ன கொடுமை சரவணன் இது?' எனும் சீரியஸான டயலாக்கை டைமிங்கில் காமெடியாய் தட்டிவிடுவார் பிரேம்ஜி.
அவன் தான்டா ராக்கர்ஸ் ராஜகோபாலன்’,பவுலிங்கா ஃபீல்டிங்கா...',
பையன் வேற பார்க்க விஜய் மாதிரி இருக்கான்’ என யதார்த்தமாக நாம் பேசும் வார்த்தைகளிலேயே ஹ்யூமரை அள்ளித் தூவியிருந்தார் வெங்கட்பிரபு
அத்துடன் “படவா கோபி” யின் கமெண்டரி பல இடங்களில் பின்னனி இசையினால் புரியாமல் போனாலும் காதில் விழுந்தவரை எல்லாம் சிரிப்பை வரவழைப்பவை.
“இவர் பந்தைப் பிடித்தாரா? அல்லது பந்து இவரைப் பிடித்ததா?”
“கௌரி ஆண்டி வீட்டு எண்டிலிருந்து ஓடி வரும் பவுலர்”
“முல்லைப் பெரியாறை விட பெரிய ஆறு”
“பேட்ஸ்பேன் அவர்களே , திருப்பதி லட்டு போல் வரும் மஞ்சள் கலரில் வருவதைப் பார்த்து அடியுங்கள்”
“இவருக்கு கிரிக்கெட் ஆடத்தெரியுமா தெரியாத என்பது இவருக்கேத் தெரியாது” போன்ற வசனங்கள் இன்னிக்கும் கிச்சு கிச்சு மூட்டுவது உண்மை.
இது போன்ற காரணங்களால்தான் இந்த படத்தின் 13 ஆண்டு நிறைவு விழாவை படக்குழுவே டிவிட்டரில் ஜோராக கொண்டாடி வருது -ன்னு நம்ம கட்டிங் கண்ணையா சொல்றார்.