நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜசேகர பாண்டியன் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். முதல்முறையாக ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக நடித்துள்ளார். பொன்மகள் வந்தாள் உலகெங்கும் மார்ச் 28 ரிலீஸ் என இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். நடிகர் சூர்யாவின் இந்த அதிரடி முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் இதுகுறித்து அவரது கருத்தினை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் “OTT – இல் படம் வெளியாவதால் தியேட்டர்களுக்கு பிரச்சனை என்று பயப்பட தேவையில்லை. டிவி வந்த போதும் இப்படித் தான் தியேட்டர்கள் அழிந்து விடும் என்றார்கள். அதற்கு பின் தான் நாம் அதிகமாக வளர்ந்தோம். சூர்யாவின் குடும்பம் அகரம் மூலம் ஏழை மாணவர்களின் படிப்புக்கு நிறைய உதவி செய்து வருகிறார்கள். இப்படத்தை அவர்கள் OTT-யில் வெளியிடுவதில் கிடைக்கும் வருமானம் மூலம் அவர்கள் மீண்டும் ஒரு படத்தை தான் தயரிப்பார்கள். எனவே இதை நாம் தடை செய்ய வேண்டாம். நாம் மேலே மேலே தான் செல்வோம். கடவுள் ஒரு வழி அடைத்தால் இன்னோரு வழி கொடுப்பார். நாம் கலந்து முடிவு எடுப்போம். அவர்களின் குடும்பத்தை தண்டிக்க வேண்டாம் நண்பர்களே” என கூறியுள்ளார்.