கொரோனா வைரஸ் காரணத்தால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், சமூக ஆர்வலர்கள்,சினிமா பிரபலங்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் என தங்களால் முயன்ற நிதியுதவியை அரசாங்கத்துக்கும், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக தொடர்ந்து 8ம் நாளாக உணவின்றித் தவிப்பவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.