தளபதி விஜய் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக 1.30 கோடி வழங்கியுள்ளர். தமிழக முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.50 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், கேரளாவுக்கு ரூ.10 லட்சம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா ரூ.5 லட்சம் நிதி என மொத்தமாக 1.30 கோடி ரூபாய் வழங்கியுள்ளர். இது தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவுவதற்காக தனது ரசிகர் மன்றங்களுக்கு ஒரு பெரும் தொகை விநியோகிக்கப்படுகிறது.
தக்க சமயத்தில் தளபதி விஜய் செய்த உதவியை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் புகழ்ந்து வருகின்றனர். தமிழகத்திற்கு மட்டும் உதவி செய்யாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு உதவி செய்தது வரவேற்கத்தக்கது. ஓரிரு நாட்களுக்கு முன் தான் 5 லட்சம் வழங்கியதர்க்கு புதுவை முதல்வர் நாராயணசாமி நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளார். இந்நிலையில் கேரளா முதலமைச்சர் பிணரயி விஜயன் “நடிகர் விஜய் கேரளா முதல்வர் நிவாரண நிதியாக 10 லட்சம் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.