நடிகர் அருண் விஜய் கடைசியாக மகிழ் திருமேனி இயக்கிய பிளாக்பஸ்டர் ‘தடம்’ படத்தில் நடித்தார். அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கம் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஆக்ஷன் பேக் என்டர்டெய்னர் ‘மாஃபியா’ பட வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார்.
‘துருவங்கள் பதினாறு’ மற்றும் வெளியிடப்படாத ‘நரகாசுரனுக்கு’ பிறகு கார்த்திக் நரேனின் மூன்றாவது படம் ‘மாஃபியா’, மேலும் இப்படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜேக்ஸ் பேஜோய் இசையமைக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ‘மாஃபியா’ படத்தின் டீஸரைப் பார்த்ததாகவும், அவரது வேலையைப் பாராட்டியதாகவும் கார்த்திக் நரேன் சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார், இப்போது சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘மாஃபியா’வின் டீஸரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவார். மாஃபியா விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.