V4UMEDIA
HomeNewsBollywoodத்ரோபேக்: சீமந்தம் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய்!!

த்ரோபேக்: சீமந்தம் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய்!!

நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் சமீபத்தில் அவரது வளைகாப்பு படங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். இருவரும் தங்க நிறத்தில் ஆடைகளை அணிந்து காணப்படுகிறார்கள். அவரது தாயார் பிருந்தா ராய் தனது கைகளில் ஆர்த்தி தட்டுடன் காணப்படுகிறார், அதை மகளின் முன் அசைக்கிறார். மற்றொரு படம் அமிதாப் மற்றும் ஜெயா பச்சன், தம்பதியினருக்கு ஆசீர்வாதம் கொடுப்பதைக் காட்டுகிறது. அபிஷேக் தனது மனைவியின் தலைமுடியை ஒரு படத்தில் சரிசெய்கிறார்.

அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா 2007 இல் திருமணம் செய்துகொண்டு, 2011 ல் தங்கள் மகள் ஆராத்யாவை பெற்றெடுத்தனர். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது திடீர் நிச்சயதார்த்தம் குறித்து பிலிம்பேருடன் பேசிய ஐஸ்வர்யா, பச்சன்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். “ரோகா” விழா என்று ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியாது. நாங்கள் தென்னிந்தியர்கள், எனவே, ‘ரோகா’ என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது, திடீரென்று அவர்களின் வீட்டிலிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது; ‘நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம்.” மேலும் அந்த நிகழ்வின் பொது அவருடைய தந்தை ஊருக்கு வெளியே இருந்ததால். எப்படி இந்த நிகழ்வு நடக்கவிருக்கிறது என்று அவர் மிகவும் பயந்ததாக கூறினார்.

அபிஷேக் கடைசியாக அனுராக் காஷ்யப்பின் மன்மர்ஜியான் படத்தில் காணப்பட்டார், விரைவில் அமேசான் பிரைம் வீடியோவின் ப்ரீத் சீசன் 2 இல் காணப்படுவார். ஐஸ்வர்யா மணி ரத்தினத்துடன் ஒரு படத்தில் பணிபுரிகிறார்.

Most Popular

Recent Comments