Home News Kollywood காஞ்சி அத்திவரதரை தரிசித்த நயன்தாரா!!

காஞ்சி அத்திவரதரை தரிசித்த நயன்தாரா!!

காஞ்சிபுரத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நிகழும் அத்திவரதர் திருவிழா, காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள குளத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்படும் அத்திவரதர் சிலை கோவிலில் 48 நாட்களுக்கு வைக்கப்படும், அங்கு பக்தர்கள் வந்து தரிசித்து செல்லலாம் இந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆண்டு
வந்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பல பிரபலங்களின் வருகைகள் காணப்பட்டன, அண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் அத்திவரதரை நேரில் சென்று தரிசித்து வந்தார்.
இவரின் வருகைக்குப் பிறகு, கோயிலுக்கு வருகை தந்த மற்றொரு பிரபலமானவர் வேறு யாருமல்ல, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. அவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் கோவிலுக்கு சென்றிருந்தனர்.

திருவிழா ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆன இன்றுடன் நிறைவடைகிறது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படப்பிடிப்பில் நயன்தாரா தற்போது பிஸியாக உள்ளார், இதில் சூப்பர்ஸ்டாரிற்கு ஜோடியாக இவர் நடிக்கிறார், மேலும்
நிவின் பாலின் நடித்த லவ் ஆக்சன் டிராமாவில் நடிக்கிறார்.