இயக்குனர் ராஜுமுருகன் தமிழ் சினிமாவின் மிகவும் பாராட்டப்பட்ட திரைப்பட இயக்குனர்களில் ஒருவர், ‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ போன்ற பல பாராட்டப்பட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார், சிறந்த ஆண் பாடகருக்கான தேசிய விருதை இவர் அண்மையில் பெற்றார்.
இயக்குனர் களஞ்சியத்தின் ‘முந்திரி காடு’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில், இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சி மகேந்திரனின் மகன் புகழ் பற்றி பேசிய ராஜுமுருகன், “சினிமாவில் உள்ளவர்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை உள்ளது … யார் யாருக்கோ ‘சூப்பர் ஸ்டார்’ மற்றும் ‘தளபதி’ போன்ற தலைப்புகள் வழங்கப்படும்போது, புகழிற்கும் ஒரு தலைப்பு கொடுங்கள்” என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நடிகர்களை விமர்சித்ததற்காகவும் அவர் தவறாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தற்காகவும் இயக்குனர் வருத்தம் தெரிவித்தார். ரஜினிகாந்த் மற்றும் விஜய் அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இத்தகைய நிலைகளை எட்டியுள்ளதாகவும், வார்த்தைகள் தவறாக அமைந்ததற்கு வருந்துகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
ஜீவா, நடாஷா சிங், சன்னி வெய்ன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘ஜிப்சி’ என்ற தனது படத்தை வெளியிடுவதற்கு ராஜுமுருகன் தயாராகி வருகிறார். இப்படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கிறார்.





















