V4UMEDIA
HomeNewsKollywoodகாலம் பேசாது, பதில் சொல்லும்: ரஜினி பேச்சு

காலம் பேசாது, பதில் சொல்லும்: ரஜினி பேச்சு

பேராசியர் சாலமன் பாப்பையா எழுதிய புறநானூறு புதிய வரிசை வகை நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை வாணி மஹாலில் நடந்தது. இந்த விழாவுக்கு பார்வையாளராக சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினி பின்னர் மேடை ஏறி பேசினார். 

அவர் பேசியதாவது:
ராமாயணம் எழுதியதால்தான் கம்பருக்கு பெருமை. அதே மாதிரி, இந்த நூலை எழுதியதால் சாலமன் பாப்பையா சாருக்கு மிகப் பெரிய புகழ் வந்துசேரும். திருச்சி சிவா பேசும்போது, இந்த நூலை எல்லோருக்கும் போய் சேரும்படி செஞ்சிடுங்க. இல்லைனா, ஸ்டாலின் முதல்வரானதும் அதை நாங்க பண்ணிடுவோம்னு சொன்னார். அதை கேட்டவுடனே, மாஃபா. பாண்டியராஜன் சார் பதறிப்போய், இல்லை இல்லை நாங்களே இந்த நூலை எல்லோருக்கும் போய் சேரும்படி செஞ்சிடுறோம்னு சொன்னார். ஆக மொத்தம், இந்த நூல் எல்லோருக்கும் போய் சேர்ந்தால் ரொம்ப சந்தோசம். இந்த நூல் எல்லா இளைஞர்களுக்கு போய் சேரணும். காலம் பேசாது ஆனால், பதில் சொல்லும். 

கம்பர் பத்தி, ராமாயணம் பத்தி, தமிழ் இலக்கியங்களை பத்தி பேசின பாப்பையா சார் வாய் ரஜினிகாந்த் பத்தியும் பேசியது எனக்கு பெருமை. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் என்னிடம் பேசுவார். அவருக்கு இந்த இளைய தலைமுறை மேல் அதிக அக்கறை இருக்கு. அவர் நூறாண்டு ஆரோக்கியமாக வாழந்து இந்த நூல் மாதிரி நிறைய பொக்கிஷங்களை மக்களுக்கு கொடுக்கணும்னு வேண்டிக்கிறேன். இவ்வாறு ரஜினி பேசினார்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, நடிகர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Most Popular

Recent Comments