மலையாள நடிகர் துல்கர் சல்மான் படங்கள் கேரளாவிலும் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் நல்ல வசூல் செய்யும்.
அனூப் சத்யன் இயக்கத்தில் 14 வருட இடைவெளிக்கு பிறகு வெற்றி ஜோடி என அனைவராலும் புகழப்படும் சுரேஷ் கோபி மற்றும் ஷோபனா மீண்டும் இணைந்து “வரணே அவஷ்யமுண்ட்” திரைப்படத்தில் நடித்தனர். இத்திரைப்படம் துல்கரின் முதல் தயாரிப்பு ஆகும். இப்படம் சில நாட்களுக்கு முன்புதான் டிஜிட்டலில் வெளியிடப்பட்டது.
இத்திரைப்படத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு காமெடி காட்சியில் நடிகர் சுரேஷ் கோபி தன் நாயை பிரபாகரன் என அழைக்கும் காட்சி அமைந்துள்ளது . இது சர்ச்சையாக வெடிக்கவே, நடிகர் துல்கர் சல்மான் அனைத்து தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ட்விட் செய்துள்ளார்.
இது தொடர்பாக பிரபல RJவும் , ‘ஓகே கண்மணி’ படத்தில் துல்கருடன் நடித்த ரம்யா தனது ட்விட்டர் பதிவில், ‘துல்கருக்கு நம் மீது பெரிய மரியாதையும், தான் சென்னைவாசி என்ற பிணைப்பும் உள்ளது. அவரை பல நாட்களாக தெரியும் என்பதால் என்னால் கண்டிப்பாக இதைச் சொல்ல முடியும். தயவுசெய்து தேவையில்லாத வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள்’ என தெரிவித்துள்ளார்.
ரம்யாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக துல்கர் சல்மான், ‘மிக்க நன்றி அன்பே அனன்யா. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயத்தினால் தான் இது என்னை அதிகமாகப் பாதிக்கிறது என்று நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
இறுதியாக ரம்யா, ‘நீங்கள் செய்யாத தவறுக்கு குற்றம் சட்டப்படுவதை பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது ஆதி. இதுவும் கடந்து போகும். பொறுமையாக இருங்கள்’ என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Knowing him for a considerably decent amount of time I can vouch that @dulQuer has always had the highest regards for us and feels belonged in Chennai .We are cooler than this and can take things with a pinch of salt . Pl stop spreading unwanted hatred . https://t.co/REMm7VanBO— Ramya Subramanian (@actorramya) April 26, 2020